தெலங்கானா மாநிலம் : லாரி மோதி கவிழ்ந்த விபத்தில் கூலி தொழிலாளர்கள் 7 பேர் பலி


தெலங்கானா மாநிலம் : லாரி மோதி கவிழ்ந்த விபத்தில் கூலி தொழிலாளர்கள் 7 பேர் பலி
x
தினத்தந்தி 26 Dec 2020 1:25 PM GMT (Updated: 26 Dec 2020 1:25 PM GMT)

தெலங்கானா மாநிலம் விகாரபாத்தில் ஆட்டோ மீது லாரி மோதி கவிழ்ந்த விபத்தில் கூலி தொழிலாளர்கள் 7 பேர் பலியாகினர்.

ஐதராபாத்

தெலுங்கானா  மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் செட்டிபள்ளி தாண்டா கிராமத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோவில் 5 கூலி தொழிலாளர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது முமின்பேட்டையில் இருந்து வந்த லாரி, முன்னால் சென்ற பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது  ஆட்டோ மீது மோதி கவிழ்ந்தது.   

இதில், லாரியின் அடியில் சிக்கி ஆட்டோ நொறுங்கியது. விபத்தில் ஆட்டோவில் இருந்த  5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

பலியானவர்கள் விகராபாத் மாவட்டத்தில் உள்ள முமின்பேட்டை மண்டலத்தின் இஸ்ரா சித்தம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் தினசரி கூலி பண்ணைத் தொழிலாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்
 

Next Story