வேலையின்மையால் இளைஞர்கள் பாதிப்பு; பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி தாக்கு


வேலையின்மையால் இளைஞர்கள் பாதிப்பு;  பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி தாக்கு
x
தினத்தந்தி 29 Dec 2020 5:48 PM GMT (Updated: 29 Dec 2020 5:48 PM GMT)

வேலையின்மையால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி, 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளன் போராட்டம் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது.

இதுதொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி சாடி உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:–

நாட்டில் வேலையின்மையால் இளைஞர்களும், பணவீக்கத்தின் துயரத்தால் பொதுமக்களும், புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுதான் மோடி அரசாங்கம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story