காஷ்மீர் : புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் - பொதுமக்கள் 7 பேர் காயம்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் புல்வாமா அருகே உள்ள த்ரால் பேருந்து நிலையத்தில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். பொதுமக்களை நோக்கி கையெறி குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்களில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story