திருப்பதி கோவிலில் ரூ.29 கோடி உண்டியல் காணிக்கை


திருப்பதி கோவிலில் ரூ.29 கோடி உண்டியல் காணிக்கை
x
தினத்தந்தி 6 Jan 2021 12:42 AM GMT (Updated: 6 Jan 2021 12:42 AM GMT)

திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ரூ.29 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தப்பட்டு இருந்தது.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து, பகல் 10 என கொண்டாடப்பட்டது. இதனையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

வைகுண்ட ஏகாதசியையொட்டி அலிபிரி வழித்தடம் வழியாக 21 ஆயிரத்து 350 பக்தர்களும், ஸ்ரீவாரிமெட்டு வழியாக 9 ஆயிரத்து 789 பக்தர்களும் பாதயாத்திரையாக வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.29 கோடியே 9 லட்சம் இருந்தது.


Next Story