ஆந்திராவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை; இன்று 289 பேருக்கு தொற்று உறுதி + "||" + Declining corona cases in Andhra; Today 289 people confirmed infected
ஆந்திராவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை; இன்று 289 பேருக்கு தொற்று உறுதி
ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்த அளவில் பதிவாகி வருகிறது.
ஐதராபாத்,
ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்ட நிலையில், அரசு மேற்கொண்ட தீவீர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக மிகக் குறைந்த அளவில் பதிவாகி வருகிறது.
இந்த நிலையில் இன்று ஆந்திர சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆந்திராவில் இன்று 289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,83,876 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இதுவரை 7,125 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் தற்போது 2,896 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை மொத்தம் 8,73,855 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.