கேரளாவில் இன்று 4,545 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


கேரளாவில் இன்று 4,545 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 10 Jan 2021 3:29 PM GMT (Updated: 10 Jan 2021 3:29 PM GMT)

கேரள மாநிலத்தில் இன்று 4,545 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று 4,545 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் 6 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கேரளாவில் இன்று 23 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 4,659 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநிலம் முழுவதும் தற்போது 64,179 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை மொத்தம் 7,43,467 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று அதிகம் உள்ள 441 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story