மும்பையில் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் உத்தவ் தாக்கரே


மும்பையில் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் உத்தவ் தாக்கரே
x
தினத்தந்தி 10 Jan 2021 4:29 PM GMT (Updated: 10 Jan 2021 4:29 PM GMT)

மும்பையில் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினரை அந்த மாநிலத்தின் முதல்வர் உத்தவ் தாக்கரே நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் 4 மாடிகளைகொண்ட அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பெறும் வார்டில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் ஏற்பட்ட புகையில் மூச்சுத்திணறி வார்டில் சிகிச்சை பெற்று வந்த 10 குழந்தைகள் உயிரிழந்தன.

மேலும் 7 குழந்தைகள் காயங்களுடன் மீட்கப்பட்டனர். காயமடைந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த மராட்டிய மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், தீ விபத்தில் உயிரிழந்த ஒரு குழந்தை குடும்பத்தினர் வீட்டிற்கு முதல்மந்திரி உத்தவ் தாக்கரே இன்று நேரில் சென்றார். அங்கு உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். மேலும், இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தவ் தாக்கரே உறுதியளித்தார்.

Next Story