ராஜஸ்தானில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர் கைது


ராஜஸ்தானில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர் கைது
x
தினத்தந்தி 10 Jan 2021 7:47 PM GMT (Updated: 10 Jan 2021 7:47 PM GMT)

ராஜஸ்தானில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர் கைது செய்யப்பட்டார்.

ஜெய்ப்பூர், 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் அருகே உள்ள லதி கிராமத்தை சேர்ந்தவர் சத்யநாராயணன் பலிவால் (வயது42). இவர் இந்திய உளவுத்துறையால் கைது செய்யப்பட்டார்.

சத்யநாராயணன் பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்ததும், இந்திய ராணுவம் தொடர்பான தகவல்களை சமூக வலைத்தளம் மூலம் அவர்களுடன் பகிர்ந்து கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டதுடன், அவரது செல்போனில் இருந்து ஏராளமான தகவல்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக இந்திய உளவுத் துறை மூத்த அதிகாரி உமேஷ் மிஸ்ரா கூறினார்.

Next Story