டெல்லியில் முன்விரோதம் காரணமாக 2 சிறுவர்களால் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லபட்ட வியாபாரி


டெல்லியில் முன்விரோதம் காரணமாக 2 சிறுவர்களால் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லபட்ட வியாபாரி
x
தினத்தந்தி 14 Jan 2021 12:07 PM GMT (Updated: 14 Jan 2021 12:07 PM GMT)

டெல்லியில் முன்விரோதம் காரணமாக சிறுவர்கள் 2 பேர் சேர்ந்து கடை வியாபாரியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

புதுடெல்லி

டெல்லியின் ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்த கடை வியாபாரி ரெய்ஸ் அன்சாரி இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரதம் இருந்து வந்துள்ளது.

இதனால்  ஆத்திரத்தில் இருந்த சிறுவர்கள், சனிக்கிழமை இரவு அன்சாரி  தனது ஸ்கூட்டரை துடைத்து கொண்டு இருந்த  போது முகமூடி அணிந்து ஸ்கேட்டிங் செய்தபடி வந்து சர்வ சாதாரணமாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்கிருந்த சிசிடிவிக்களை ஆய்வு செய்து தப்பியோடிய சிறுவர்களை கைது செய்து, துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story