பீகாரில் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவன மேலாளர் சுட்டுக் கொலை


படம்:  PTI
x
படம்: PTI
தினத்தந்தி 14 Jan 2021 3:52 PM GMT (Updated: 14 Jan 2021 3:52 PM GMT)

பீகாரின் பாட்னாவில் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவன மேலாளர், அவரின் வீட்டு முன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

பாட்னா

பீகாரின் பாட்னாவில் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவன மேலாளர், அவரின் வீட்டு முன் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்னா விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவன மேலாளராகப் பணியாற்றிய ரூபேஷ் குமார் சிங் பணி முடிந்து காரில் வீட்டுக்குத் திரும்பினார்.

மாலை 7 மணிக்கு வீட்டு முன் காரை நிறுத்தியபோது அடையாளம் தெரியாத ஆட்கள் அவரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே  அவர் உயிரிழந்தார். அந்தக் குடியிருப்பில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தும் அவை செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது.

Next Story