கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,624- பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,624- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் மாநிலங்களில் ஒன்றாக விளங்கும் கேரளாவில் இன்று புதிதாக 5,624- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,624 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு 67,496 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 7,65,757-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,397-ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பை கண்டறிய மாநிலத்தில் இன்று 62 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story