கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,624- பேருக்கு கொரோனா


கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில்  5,624- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 15 Jan 2021 3:23 PM GMT (Updated: 15 Jan 2021 3:23 PM GMT)

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,624- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. நாட்டில்  கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் மாநிலங்களில் ஒன்றாக விளங்கும் கேரளாவில் இன்று புதிதாக 5,624- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கேரளாவில்  கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,624 பேருக்கு  வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு 67,496 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுவரை மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 7,65,757-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,397-ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பை கண்டறிய மாநிலத்தில் இன்று 62 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.


Next Story