சுப்ரீம் கோர்ட்டு அமைத்த 4 உறுப்பினர் குழுவில் இருந்து பூபிந்தர்சிங் மான் விலகல்


சுப்ரீம் கோர்ட்டு அமைத்த 4 உறுப்பினர் குழுவில் இருந்து பூபிந்தர்சிங் மான் விலகல்
x
தினத்தந்தி 16 Jan 2021 12:19 AM GMT (Updated: 16 Jan 2021 12:19 AM GMT)

வேளாண் சட்ட விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு அமைத்த 4 உறுப்பினர் குழுவில் இருந்து பூபிந்தர்சிங் மான் விலகியுள்ளார்.

புதுடெல்லி,

3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் பேச்சுவார்த்தையை தீர்க்க சுப்ரீம் கோர்ட்டு 4 உறுப்பினர் குழு ஒன்றை அமைத்தது.

இப்போது அந்த குழுவில் இருந்து மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யும், பாரதீய கிசான் யூனியன் தேசிய தலைவரும், அகில இந்திய கிசான் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான பூபிந்தர் சிங் மான் விலகி உள்ளார்.

இதையொட்டி அவர் விடுத்த அறிக்கையில், நான் ஒரு விவசாயி, விவசாய சங்கத்தின் தலைவர் என்ற வகையில், தற்போது நிலவும் உணர்வுகளை கருத்தில் கொண்டு, விவசாய சங்கங்கள் மற்றும் பொதுமக்களிடையே உள்ள அச்சங்களால், நான் எனக்கு வழங்கப்பட்ட எந்தவொரு பதவியையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன்.

அந்த வகையில் சுப்ரீம் கோர்ட்டு அமைத்த குழுவில் இருந்து விலகுகிறேன். நான் எப்போதும் விவசாயிகளுடனும், பஞ்சாப் மாநிலத்துடனும் இணைந்து நிற்பேன் என கூறி உள்ளார்.

Next Story