கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,960- பேருக்கு கொரோனா


கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,960- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 16 Jan 2021 4:03 PM GMT (Updated: 16 Jan 2021 4:03 PM GMT)

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,960- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  5,960 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.   இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,960 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து இன்று  68,416 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 7,70,768-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,442-ஆக அதிகரித்துள்ளது.


Next Story