மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,081- பேருக்கு கொரோனா


மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,081- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 17 Jan 2021 5:23 PM GMT (Updated: 17 Jan 2021 5:23 PM GMT)

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 081- பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 081- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 50 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து இன்று 2,342-பேர் குணம் அடைந்துள்ளனர். 

மராட்டியத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 90 ஆயிரத்து 759- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்து 86 ஆயிரத்து 469- ஆக உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்து 738- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 52 ஆயிரத்து 653 ஆக உள்ளது. 


Next Story