மராட்டியத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.5 ஆக பதிவு


மராட்டியத்தில் நிலநடுக்கம்:  ரிக்டரில் 3.5 ஆக பதிவு
x
தினத்தந்தி 17 Jan 2021 7:12 PM GMT (Updated: 17 Jan 2021 7:12 PM GMT)

மராட்டியத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 3.5 ஆக பதிவாகி உள்ளது.

புனே,

மராட்டியத்தின் பால்கர் மாவட்டத்தில் இரவு 10 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 3.5 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இதனால் அந்த பகுதி மக்கள் அலறியடித்து வீடுகளில் இருந்து வெளியே வந்தனர்.  எனினும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

Next Story