மம்தா பானர்ஜியை தோற்கடிக்காவிட்டால் அரசியலில் இருந்தே விலகுவேன்: சுவேந்து அதிகாரி சவால்


மம்தா பானர்ஜியை தோற்கடிக்காவிட்டால் அரசியலில் இருந்தே விலகுவேன்: சுவேந்து அதிகாரி சவால்
x
தினத்தந்தி 18 Jan 2021 3:49 PM GMT (Updated: 18 Jan 2021 3:49 PM GMT)

மம்தா பானர்ஜியை தோற்கடிக்காவிட்டால் அரசியலில் இருந்து விலகுவேன் என்று சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.

கொல்கத்தா, 

திரிணமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்தும், அமைச்சர் பதவியிலிருந்தும் விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜியை தோற்கடிக்காவிட்டால் அரசியலில் இருந்தே விலகிவிடுவேன் எனக்கூறியுள்ளார். எனினும், நான் நந்திகிராம் சட்ட சபை தொகுதியில்  நான் போட்டியிடுவது பற்றி பாஜக தலைமை முடிவு எடுத்து அறிவிக்க்கும் எனவும் சுவேந்து அதிகாரி தெரிவித்தார். 

Next Story