தேசிய செய்திகள்

மும்பையில் 25-ந் தேதி விவசாயிகள் போராட்டம்; உத்தவ் தாக்கரே பங்கேற்க முடிவு + "||" + Sharad Pawar, Uddhav Thackeray to take part in protest against new farm laws

மும்பையில் 25-ந் தேதி விவசாயிகள் போராட்டம்; உத்தவ் தாக்கரே பங்கேற்க முடிவு

மும்பையில் 25-ந் தேதி விவசாயிகள் போராட்டம்; உத்தவ் தாக்கரே பங்கேற்க முடிவு
மும்பையில் 25-ந் தேதி நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சரத்பவார் பங்கேற்கிறார்கள்.
மும்பை,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் மும்பையில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பங்கேற்க இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், மாநில மந்திரியுமான நவாப் மாலிக் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

மும்பையில் சில விவசாய அமைப்புகள் வருகிற 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை போராட்டம் நடத்த உள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த போராட்டம் நடைபெறுகிறது. 25-ந்தேதி ஆசாத் மைதானில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் எங்களது கட்சி தலைவர் சரத்பவார் பங்கேற்று ஆதரவு தெரிவிக்கிறார். முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் எங்களது கூட்டணி கட்சி தலைவர்களும் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இருகரம் கூப்பி கேட்கிறேன், மராத்தா இடஒதுக்கீட்டை காப்பாற்ற உதவுங்கள்; பிரதமருக்கு, உத்தவ் தாக்கரே வேண்டுகோள்
மராத்தா இடஒதுக்கீட்டை காப்பாற்ற உடனடியாக உதவும்படி இருகரம் கூப்பி கேட்பதாக பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. 3-வது கொரோனா அலையை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம்: உத்தவ் தாக்கரே
3-வது கொரோனா அலையை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
3. மராட்டியத்தில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்த வேண்டியதில்லை: உத்தவ் தாக்கரே
மக்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவதால் கடுமையான ஊரடங்கை அமல்படுத்த வேண்டியது இல்லை என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
4. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி: பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே நன்றி
மத்திய அரசு நேற்று 18 வயதுக்கு அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதியை வழங்கி உள்ளது.
5. உத்தவ் தாக்கரேவின் மலிவான அரசியல் அதிர்ச்சி அளிக்கிறது: பியூஷ் கோயல் குற்றச்சாட்டு
மராட்டியத்துக்கு இந்த மாத இறுதிக்குள் 2 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் நாளொன்றுக்கு தேவைப்படும் என மதிப்பிட்டு உள்ளதாக பிரதமர் மோடிக்கு மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கடிதம் எழுதியிருந்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை