இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 14,545 பேருக்கு கொரோனா தொற்று


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 14,545 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 22 Jan 2021 4:51 AM GMT (Updated: 22 Jan 2021 4:51 AM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,545 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.




புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,545 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,25,428 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 163 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,53,032 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 18,002 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,02,83,708 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 1,88,688 பேர் சிகிச்சை பெறுகின்றனர். மேலும் இந்தியா முழுவதும் 10,43,534 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story