கேரளாவில் இன்று 6,753 பேருக்கு கொரோனா தொற்று


கேரளாவில் இன்று 6,753 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 22 Jan 2021 5:53 PM GMT (Updated: 22 Jan 2021 5:53 PM GMT)

கேரளாவில் இன்று புதிதாக 6,753- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்று புதிதாக 6,753- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் தொற்று பாதிப்பை கண்டறிய இன்று 58 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.  தொற்று பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 6,108- பேர் குணம் அடைந்துள்ளனர்.

 கேரளாவில்  இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 77 ஆயிரத்து 282 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 70 ஆயிரத்து 395 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 3 ஆயிரத்து 94 ஆக அதிகரித்துள்ளது. 

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 564 ஆக அதிகரித்துள்ளது.


Next Story