உத்தரபிரதேசத்தில் மந்திரிக்கு கொரோனா உறுதி


உத்தரபிரதேசத்தில் மந்திரிக்கு கொரோனா உறுதி
x
தினத்தந்தி 22 Jan 2021 10:01 PM GMT (Updated: 22 Jan 2021 10:01 PM GMT)

உத்தரபிரதேசத்தில் வியாழக்கிழமை வரை 5 லட்சத்து 97 ஆயிரத்து 823 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 ஆயிரத்து 597 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பல்,

உத்தரபிரதேச மாநிலத்தில் இடைநிலை கல்வித் துறை மந்திரியாக இருப்பவர் குலாப் தேவி. சந்தவுசி தொகுதியில் இருந்து பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆக வெற்றி பெற்று மந்திரியாக பொறுப்பேற்றவர். நேற்றைய தினம் இவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற தொடங்கி உள்ளார்.

“2 நாட்களாக எனக்கு இருமல் இருந்து வந்தது. நான் பரிசோதனை செய்துகொண்டபோது கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தாங்களாக பரிசோதனை செய்துகொள்ளுங்கள். நான் நலம் பெற்று, விரைவில் பொது சேவைப் பணிக்கு திரும்புவேன்” என்று கூறி உள்ளார். உத்தரபிரதேசத்தில் வியாழக்கிழமை வரை 5 லட்சத்து 97 ஆயிரத்து 823 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 ஆயிரத்து 597 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story