மராட்டியத்தில் புதிதாக 1,842 பேருக்கு கொரோனா தொற்று


மராட்டியத்தில் புதிதாக 1,842 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 25 Jan 2021 4:59 PM GMT (Updated: 25 Jan 2021 4:59 PM GMT)

மராட்டியத்தில் புதிதாக 1,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மராட்டிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மும்பை,

மராட்டிய மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, மராட்டியத்தில்  இன்று புதிதாக 1,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,10,948 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று 3,080 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,15,344 ஆக உயர்ந்துள்ளது. இன்று 30 பேர் பலியாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50,815 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 43,561 சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story