விவசாயிகளுக்கு ஆதரவாக அரியானவை சேர்ந்த எம்.எல்.ஏ பதவி விலகல்


விவசாயிகளுக்கு ஆதரவாக அரியானவை சேர்ந்த  எம்.எல்.ஏ பதவி விலகல்
x
தினத்தந்தி 27 Jan 2021 5:00 PM GMT (Updated: 27 Jan 2021 5:00 PM GMT)

விவசாயிகளுக்கு ஆதரவாக அரியானவை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ பதவி விலகினார்.டிராக்டரில் சென்று தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்தார்.

புதுடெல்லி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் குடியரசு  தினத்தில் நேற்று நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை  வெடித்தது. 

இந்த நிலையில் டெல்லியில் போராட்டம் நடத்திவரும்  விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய தேசிய லோக்தளம்  தலைவர் அபய் சிங் சவுதலா அரியானா சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை  சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.

அபய் சிங் சவுதலா அரியானா சட்டமன்றத்திற்கு டிராக்டரை ஓட்டி சென்று தனது  ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்தார்.

Next Story