"பெண்கள் துணிச்சலை வளர்த்துக்கொள்ள வேண்டும்" - ராகுல்காந்தி வேண்டுகோள்
பெண்கள் துணிச்சலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வயநாடு,
கேரளா மாநிலம் வயநாடு மலப்புரம் அருகே உள்ள வானூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தை ராகுல்காந்தி திறந்து வைத்தார். அதன் பின்னர் விழாவில் ராகுல்காந்தி பேசியதாவது:-
பெண்கள் யாரையும் சார்ந்து இருக்காதாவாறு பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்க வேண்டும். பெண்கள் துணிச்சலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி நாட்டை பலவீனப்படுத்தியுள்ளார். ஜிஎஸ்டியைக் கொண்டு பொருளாதாரத்தை நாசப்படுத்தியுள்ளார். இந்தியாவின் வேலையின்மை விகிதம் மிக அதிகமாக உள்ளது.
இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.
Related Tags :
Next Story