கடும் பனிமூட்டம் காரணமாக ரெயில்கள் தாமதம்


Photo Credit: PTI
x
Photo Credit: PTI
தினத்தந்தி 29 Jan 2021 2:34 AM GMT (Updated: 29 Jan 2021 3:04 AM GMT)

கடும் பனி மூட்டம் காரணமாக 27 ரெயில்கள் தாமதமாக செல்வதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லி உள்பட வட மாநிலங்களில் பனி மூட்டம் அதிகமாக காணப்படுகிறது. காலை வேளையில் நிலவும் கடும் பனி மூட்டம் காரணமாக சில அடி தூரங்களே கண்ணுக்கு புலப்படுகிறது. 

இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பனி மூட்டம் காரணமாக ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று 27  ரெயில்கள் தாமதமாக வருவதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது


Next Story