மும்பையில் வணிக வளாக கட்டிடத்தில் தீ விபத்து
தென்மும்பையில் 5 மாடிகள் கொண்ட வணிக வளாக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
மும்பை,
தென்மும்பை பல்லார்ட் எஸ்டேட் பகுதியில் சிந்தியாஹவுஸ் என்ற 5 மாடி கொண்ட வணிக வளாக கட்டிடம் உள்ளது. இந்த கட்டத்தில் உள்ள பழைய பொருட்கள் வைக்கப்பட்டு இருக்கும் அறையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பற்றிய தீயை அரை மணி நேரத்தில் போராடி முற்றிலும் அணைத்தனர்.
இந்த விபத்தில் யாரும் தீக்காயமடையவில்லை என தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு இதே கட்டிடத்தில் செயல்பட்டு வந்த வருமானவரி அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story