டெல்லியில் ஹெராயின், கோக்கைன் போதை பொருள் பறிமுதல்; 3 வெளிநாட்டு நபர்கள் கைது


டெல்லியில் ஹெராயின், கோக்கைன் போதை பொருள் பறிமுதல்; 3 வெளிநாட்டு நபர்கள் கைது
x
தினத்தந்தி 5 Feb 2021 8:18 AM GMT (Updated: 5 Feb 2021 9:43 AM GMT)

டெல்லியில் ஹெராயின், கோக்கைன் போன்ற போதை பொருட்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் 3 வெளிநாட்டு நபர்களை கைது செய்தனர்.

புதுடெல்லி,

நாட்டின் தலைநகர் டெல்லியில் ஹெராயின் மற்றும் கோக்கைன் போன்ற போதை பொருட்களை கடத்துவது பற்றிய தகவல் டெல்லி போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு வந்தது.

இதனை தொடர்ந்து அதிகாரிகள் தீவிரமுடன் கண்காணித்து வந்தனர்.  இதில் சந்தேகத்திற்குரிய வகையிலான 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அவர்களிடம் 8 கிலோ ஹெராயின் மற்றும் ஒரு கிலோ கோக்கைன் ஆகியவை இருந்தது தெரிய வந்தது.  அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  இவற்றின் சர்வதேச மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

அதிகாரிகள் 3 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  அவர்களில் 2 பேர் உகாண்டா நாட்டை சேர்ந்தவர்கள்.  மற்றொரு நபர் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் ஆவார்.

Next Story