நடிகை கங்கனாவுக்கு எதிரான வழக்கு; விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு


நடிகை கங்கனாவுக்கு எதிரான வழக்கு; விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு  நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 5 Feb 2021 11:18 PM GMT (Updated: 5 Feb 2021 11:18 PM GMT)

நடிகை கங்கனாவுக்கு எதிரான வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நடிகை கங்கனாவுக்கு எதிரான வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பை, 

நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி ஒரு குறிப்பிட்ட பிரிவினரை புண்படுத்தும் வகையில் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்ததாக அலிப் காசிப் கான் தேஷ்முக் என்ற வக்கீல் அம்போலி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். 

மனுவை விசாரித்த கோர்ட்டு நடிகை கங்கனா ரணாவத், அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டனர். ஆனால் போலீசார் கோர்ட்டு வழங்கிய காலக்கெடுவுக்குள் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.

இதுதொடர்பான விசாரணையின் போது, கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரிக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டனர். மேலும் மனு மீதான விசாரணையை மார்ச் 4-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Next Story