சர்வாதிகார மத்திய அரசை ஆட்சியில் இருந்து மக்கள் தூக்கி எறியவேண்டும்; காங்கிரஸ்


சர்வாதிகார மத்திய அரசை ஆட்சியில் இருந்து மக்கள் தூக்கி எறியவேண்டும்; காங்கிரஸ்
x
தினத்தந்தி 6 Feb 2021 7:23 PM GMT (Updated: 6 Feb 2021 7:34 PM GMT)

சர்வாதிகார மத்திய அரசை ஆட்சியில் இருந்து மக்கள் தூக்கி எறியவேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மும்பை, 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியின் எல்லையை முற்றுகையிட்டு கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல விவசாய அமைப்புகள் மும்பையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டன. 

இந்த போராட்டத்தில் மராட்டியத்தில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியும் கலந்துகொண்டது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நசீம் கான் ஆவேசமாக கூறியதாவது:-

பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு விவசாயிகள் பிரச்சினையில தீர்வுகாண முயற்சிப்பதை விட, டெல்லிக்கு அருகே பல நாட்களாக மழையையும், குளிரையும் பொருட்படுத்தாமல் போராடிவரும் விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என முத்திரை குத்துவதில் தான் குறியாக உள்ளன. எனவே மக்கள் ஒன்றுகூடி இந்த சர்வாதிகார மத்திய அரசை ஆட்சியில் இருந்து தூக்கி எறியவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story