மும்பையில் புதிதாக 448 பேருக்கு கொரோனா பாதிப்பு


மும்பையில் புதிதாக 448 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 7 Feb 2021 7:10 PM GMT (Updated: 7 Feb 2021 7:10 PM GMT)

மும்பையில் புதிதாக 448 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை, 

மும்பையில் நேற்று புதிதாக 448 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் நகரில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 11 ஆயிரத்து 874 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 2 லட்சத்து 94 ஆயிரத்து 128 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று மட்டும் நகரில் 741 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்தனர். தற்போது 5 ஆயிரத்து 441 பேர் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல மேலும் 4 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதனால் நகரில் வைரஸ் நோய்க்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 390 ஆக அதிகரித்து உள்ளது. மும்பையில் நோய் பாதித்தவர்களில் 94 சதவீதம் பேர் குணமடைந்தனர். நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 572 நாட்களாக உள்ளது. நகரில் தற்போது 158 கட்டுபாட்டு மண்டலங்கள் உள்ளன. 1,869 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.


Next Story