சசிகலா தங்கியிருந்த ரிசார்ட் அருகே தமிழ் பேனர்களை தீயிட்டு கொளுத்திய கன்னட அமைப்புகள்!
சசிகலா தங்கியிருந்த ரிசார்ட் அருகே தமிழில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கன்னட அமைப்புகளை தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு,
பெங்களூருவில் சசிகலா தங்கி இருந்த ரிசார் அருகே தமிழில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கன்னட அமைப்புகள் தீயிட்டு கொளுத்தினர்.
இது குறித்து கூறிய கன்னட அமைப்புகள்,
சசிகலா மீது கோபம் இல்லை. தமிழில் அதிகளவில் பேனர்கள் வைத்ததால் எதிர்ப்பை பதிவு செய்தோம் என்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் சிலர் கூறுகையில்,
சசிகலா சிறைக்கு வெளியே வெளியே வந்து இங்கு தங்கியிருந்தார். ஆனால் அவர் இன்று திரும்பிச் செல்லும்போது தமிழ் பேனர்கள் இங்கே வைப்பது தவறு என்று கூறினார்.
Related Tags :
Next Story