சபரிமலை: மாதாந்திர பூஜையில், நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்க கேரள அரசு அனுமதி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 9 Feb 2021 12:16 PM GMT (Updated: 9 Feb 2021 12:16 PM GMT)

சபரிமலையில் அடுத்த மாதம் நடைபெறும் மாதாந்திர பூஜையில், நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்க கேரள அரசு அனுமதி வழங்கி உள்ளது.

திருவனந்தபுரம், 

2020-2021 மண்டல மகர விளக்கு சீசன் நிறைவு பெற்று, மீண்டும் மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வரும் 12-ந் தேதி திறக்கப்பட உள்ளது. 

இந்நிலையில் சபரிமலையில் அடுத்த மாதம் நடைபெறும் மாதாந்திர பூஜையில், நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்க கேரள அரசு அனுமதி வழங்கி உள்ளது.

முன்னதாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளொன்றுக்கு 15,000 பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மாசிமாத பூஜையின் போது அனுமதிக்க கேரள அரசிடம் தேவசம்போர்டு கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story