ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 50- பேருக்கு கொரோனா பாதிப்பு


ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 50- பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 10 Feb 2021 5:54 PM GMT (Updated: 10 Feb 2021 5:54 PM GMT)

ஆந்திராவில் கடந்த 24- மணி நேரத்தில் 50- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமராவதி,

ஆந்திராவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு சீராக குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 50- பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து 121- பேர் இன்று குணம் அடைந்துள்ளனர். 

மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 88 ஆயிரத்து 605-ஆக உள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 80 ஆயிரத்து 599- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை 7,161- பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 845- ஆக உள்ளது. 

Next Story