வேளாண் சட்ட விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை; இங்கிலாந்து எம்.பி. கருத்து


வேளாண் சட்ட விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை; இங்கிலாந்து எம்.பி. கருத்து
x
தினத்தந்தி 13 Feb 2021 3:06 AM GMT (Updated: 13 Feb 2021 3:06 AM GMT)

‘டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தை இங்கிலாந்து அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று இங்கிலாந்து எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.

லண்டன், 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த போராட்டம் தொடர்பாக பல நாடுகள் கருத்து தெரிவித்து வருகின்றன. இதற்கு இந்தியாவும் எதிர்வினை ஆற்றி வருகிறது.

இந்த சூழலில் டெல்லியில் நடந்து வரும் போராட்டம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என இங்கிலாந்து எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற பொதுசபையில் கோரிக்கை விடுத்தனர். இதற்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் பொதுச்சபை தலைவரான ஜேக்கப் ரீஸ்-மோக் நேற்று பதிலளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தை இங்கிலாந்து அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. வேளாண் சீர்திருத்தங்கள் இந்தியாவின் ஒரு உள்நாட்டு பிரச்சினை ஆகும். எனினும் இது கவலைப்பட வேண்டிய ஒரு அம்சம்தான்’ என்று கூறினார்.

இந்தியா நமது நட்பு நாடாக இருக்கும் நிலையில், அந்த நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதாக நினைக்கும்போது, ஒரு நண்பராக நாம் அதை சுட்டிக்காட்டலாம் என கூறிய ஜேக்கப், கடந்த டிசம்பர் மாதம் இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டோமிக் ராப் இந்தியா சென்றிருந்தபோது வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரிடம் இது குறித்து எடுத்து கூறியதாகவும் தெரிவித்தார்.

Next Story