ஜம்மு காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து: உள்துறை அமைச்சர் அமித்ஷா


ஜம்மு காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து: உள்துறை அமைச்சர் அமித்ஷா
x
தினத்தந்தி 13 Feb 2021 9:34 AM GMT (Updated: 13 Feb 2021 9:34 AM GMT)

ஜம்மு காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பாராளுமன்ற மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பேசுகையில் கூறியதாவது:  ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை அவையில் இருக்கும் அரசியல் கட்சிகள் அரசியல் ஆக்கக் கூடாது. ஜம்மு காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும். 

ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. எதிர்க்கட்சிகள் கூட இதை மறுக்க முடியாது. பஞ்சாயத்து தேர்தலில் 51 சதவீத வாக்குகள் பதிவாகின. அனைவரும் அச்சமன்றி வாக்களிக்க முடிந்தது. 

மனிஷ் திவாரி காங்கிரஸ் ஆட்சி காலத்தை நினைவு கூர்ந்தார். அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே அமைதியின்மை நிலவிய அந்த நாட்களை நான் மீண்டும் நினைத்து பார்க்க விரும்பவில்லை. அதுபோன்ற நாட்கள் மீண்டும் அங்கு (ஜம்மு காஷ்மீர்) வராது. ஏனெனில், தற்போது எங்களது அரசாங்கம் உள்ளது. “ என்றார். 

Next Story