விவசாயம் தேசத்திற்கு சொந்தமானது, தொழிலதிபர்களுக்கு அல்ல - ராகுல்காந்தி விமர்சனம்


விவசாயம் தேசத்திற்கு சொந்தமானது, தொழிலதிபர்களுக்கு அல்ல - ராகுல்காந்தி விமர்சனம்
x
தினத்தந்தி 13 Feb 2021 12:18 PM GMT (Updated: 13 Feb 2021 12:18 PM GMT)

விவசாயம் என்பது தேசத்திற்கானது ('பாரத் மாதா') தொழிலதிபர்களுக்கானதல்ல என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

ஜெய்ப்பூர்,

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அஜ்மீரில் நடைபெற்ற வேளாண் சட்டங்களுக்கு எதிரானப் போராட்டத்தில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது:-

வேளாண் சட்டங்களை அமல்படுத்தினால் நாட்டில் வேலையின்மை அதிகரிக்கும். பிரதமர் விவசாயிகளுக்கு வாய்ப்புகளை வழங்குவதாக தெரிவிக்கிறார். ஆனால் அவர் பட்டினி, வேலையின்மை மற்றும் தற்கொலைகளைத் தான் அவர் வழங்கியிருக்கிறார். விவசாயம் என்பது பாரத தேசத்திற்கானது, தொழிலதிபர்களுக்கானதல்ல என்றார்.

Next Story