பிரதமர் மோடி, வரும், 25ம் தேதி மீண்டும் தமிழகம் வருகை


பிரதமர் மோடி, வரும், 25ம் தேதி மீண்டும் தமிழகம் வருகை
x
தினத்தந்தி 15 Feb 2021 2:41 PM GMT (Updated: 15 Feb 2021 2:41 PM GMT)

பிரதமர் மோடி, வரும், 25ம் தேதியும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 19ம் தேதியும் தமிழகம் வருகின்றனர்

சென்னை :

தமிழகத்தில், பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்க, நேற்று டில்லியில் இருந்து, தனி விமானம் வாயிலாக, பிரதமர் மோடி, சென்னை வந்தார். நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், அவர் கேரளா கிளம்பி சென்றார். இந்நிலையில், பிரதமர் மோடி இந்த மாதம் மீண்டும் தமிழகம் வருவார் என தமிழக பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறினார்.

சென்னையில் தமிழக பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி  நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

 தமிழகத்திற்கு, 25ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் வருகிறார். கோவை வரும் அவர், அரசு மற்றும் பா.ஜ.க நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.இதேபோல, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 19ம் தேதி தமிழகம் வருகிறார். ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், 21ம் தேதி சேலம் வருகிறார். இவ்வாறு, அவர் கூறினார்.

தமிழக பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கோவை சின்னியம்பாளையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின் தமிழக பா.அஜக தலைவர் எல்.முருகன் செநிருபர்களிடம் கூறியதாவது:-

"தேர்தல் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன. பாஜக- அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது.கூடிய விரைவில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும்.இரட்டை இலக்கத்தில் எங்கள் உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருப்பார்கள்.

கோவையில் வரும் 25-ம் தேதி நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். வரும் 21-ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநாட்டில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்" என்று தெரிவித்தார்.

Next Story