கணவனைவிட்டு ஓடிய பெண்ணுக்கு நூதன தண்டனை
மத்தியப் பிரதேசத்தில் கணவனைவிட்டு ஓடிய பெண்ணுக்கு நூதன தண்டனை அளிக்கபட்டது.
போபால்
மத்தியப் பிரதேசத்தில் குணா பகுதியில் கணவனைவிட்டு பிரிந்துசென்ற பெண்ணை, கட்டாயப்படுத்தி கணவன் வீட்டைச் சேர்ந்த ஒருவரை 3 கி.மீ தூரம் தோளில் தூக்கிச் செல்ல வைத்து கொடூர தண்டனை அரங்கேற்றியுள்ளனர்.
அந்த பெண் தூக்கிச்செல்லும்போது அவருடன் சிலர் கிரிக்கெட் மட்டைகளுடன் கேலிசெய்தபடி சென்ற வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 4 பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
#WATCH: A video went viral of a woman who was made to walk in MP's Guna while carrying a boy on shoulders. She had allegedly left her husband for someone else. Angered by this, her relatives also allegedly beat her
— ANI (@ANI) February 16, 2021
"Case registered. 3 of 4 accused arrested," said SP Guna(15.02) pic.twitter.com/LWTE9gwNWy
Related Tags :
Next Story