கணவனைவிட்டு ஓடிய பெண்ணுக்கு நூதன தண்டனை


கணவனைவிட்டு  ஓடிய பெண்ணுக்கு நூதன தண்டனை
x
தினத்தந்தி 16 Feb 2021 2:45 PM GMT (Updated: 16 Feb 2021 2:45 PM GMT)

மத்தியப் பிரதேசத்தில் கணவனைவிட்டு ஓடிய பெண்ணுக்கு நூதன தண்டனை அளிக்கபட்டது.

போபால்

மத்தியப் பிரதேசத்தில்  குணா பகுதியில் கணவனைவிட்டு பிரிந்துசென்ற பெண்ணை, கட்டாயப்படுத்தி கணவன் வீட்டைச் சேர்ந்த ஒருவரை 3 கி.மீ தூரம் தோளில் தூக்கிச் செல்ல வைத்து கொடூர தண்டனை அரங்கேற்றியுள்ளனர்.

அந்த பெண் தூக்கிச்செல்லும்போது அவருடன் சிலர் கிரிக்கெட் மட்டைகளுடன் கேலிசெய்தபடி சென்ற வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 4 பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.



Next Story