எம்.எஸ்.டோனி படத்தில் நடித்த மேலும் ஒரு நடிகர் தற்கொலை


எம்.எஸ்.டோனி படத்தில் நடித்த மேலும் ஒரு நடிகர் தற்கொலை
x
தினத்தந்தி 16 Feb 2021 11:35 PM GMT (Updated: 16 Feb 2021 11:35 PM GMT)

எம்.எஸ்.டோனி படத்தில் நடித்த மேலும் ஒரு நடிகர் தற்கொலை செய்துகொண்டார்.

மும்பை,

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனியின் வாழ்க்கை வரலாறு படமான ‘எம்.எஸ். டோனி தி அன்டோல்ட் ஸ்டோரி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஹீரோவாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் சில மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில், அதே திரைப்படத்தில் நடித்த சந்தீப் நஹர் என்ற நடிகரும் நேற்று முன்தினம் இரவு தற்கொலை செய்து கொண்டார்.

மும்பை கோரேகான் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த சந்தீப் நஹர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்னதாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தனது இறுக்கமான மனநிலை குறித்து வீடியோ ஒன்றும் பதிவு செய்துள்ளார். தனது வீடியோவில், தொழில்முறை மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகள், குறிப்பாக அவரது சிக்கலான திருமணம் பற்றி பேசினார்.

சந்தீப் நஹரின் தற்கொலை அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Next Story