நாடு முழுவதும் 88.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை
நாடு முழுவதும் 88.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாட்டில் இதுவரை 88.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சகம் தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: -
செவ்வாய்க்கிழமை மட்டும் மாலை 6 மணி வரை 1,90,665 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 88,57,341 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் சுகாதாரப் பணியாளர்கள் 61,29,745 பேருக்கு முதல் முறையாகவும், 2,16,339 பேருக்கு இரண்டாம் முறையும் கொடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story