அசாமில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
அசாமில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. சேதம் எதுவும் இல்லை
கவுகாத்தி
இன்று மாலை 5.54 மணியளவில் அசாம் மற்றும் கவுகாத்தியின் சோனித்பூர் மாவட்டத்தில் 4.7 நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (என்.சி.எஸ்) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதி பத்து கி.மீ ஆழத்தில் அட்சரேகை 26.71 டிகிரி வடக்கிலும், தீர்க்கரேகை 92.63 டிகிரி கிழக்கிலும் சோனித்பூர் மாவட்டத்தின் தேஸ்பூர் பகுதியில் அமைந்துள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது.
எந்தவொரு உயிர் இழப்போ அல்லது சேதம் குறித்து விவரம் இதுவரை தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story