கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 378 பேருக்கு கொரோனா


கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 378 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 17 Feb 2021 6:17 PM GMT (Updated: 17 Feb 2021 6:17 PM GMT)

கர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 378 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 378 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,46,454 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் இன்று 3 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, இதுவரை மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,276 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 537 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

மாநிலம் முழுவதும் தற்போது 5,698 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை மொத்தம் 9,28,461 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story