ஜம்முவில் போருக்கான ஆயுதங்கள் பறிமுதல்; இந்திய ராணுவம் நடவடிக்கை


ஜம்முவில் போருக்கான ஆயுதங்கள் பறிமுதல்; இந்திய ராணுவம் நடவடிக்கை
x
தினத்தந்தி 18 Feb 2021 8:41 AM GMT (Updated: 18 Feb 2021 8:41 AM GMT)

ஜம்முவில் சீன பிஸ்டல்கள், எறிகுண்டுகள் உள்ளிட்ட போருக்கான ஆயுதங்களை இந்திய ராணுவம் கைப்பற்றி உள்ளது.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசார் கூட்டாக இணைந்து கடந்த 2 நாட்களாக அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், போருக்கு பயன்படுத்த கூடிய ஆயுதங்கள் மறைவாக குழிக்குள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  அதில், சீன ரக பிஸ்டல்கள் 2, ஏ.கே. 47 ரக துப்பாக்கி ஒன்று, எஸ்.எல். ரைபிள் துப்பாக்கி ஒன்று, போல்ட் ரைபிள் ஒன்று, 4 எறிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  தொடர்ந்து படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story