சைக்கிளில் சென்றவர் பலி காரில் சிக்கிய பிணத்துடன் 10 கி.மீ. பயணம் செய்த டிரைவர்


சைக்கிளில் சென்றவர் பலி காரில் சிக்கிய பிணத்துடன் 10 கி.மீ. பயணம் செய்த டிரைவர்
x
தினத்தந்தி 18 Feb 2021 10:12 PM GMT (Updated: 18 Feb 2021 10:36 PM GMT)

பஞ்சாபின் சிராக்பூரில் இருந்து காமனோ நோக்கி நேற்று முன்தினம் காலை கார் ஒன்று சென்றது. மொகாலி அருகே வந்தபோது துரிந்தர் மண்டல் என்பவர் ஓட்டிச்சென்ற சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது.

சண்டிகார்,

பஞ்சாபின் சிராக்பூரில் இருந்து காமனோ நோக்கி நேற்று முன்தினம் காலை கார் ஒன்று சென்றது. மொகாலி அருகே வந்தபோது துரிந்தர் மண்டல் என்பவர் ஓட்டிச்சென்ற சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட துரிந்தர் மண்டல் காரின் மேற்கூரையில் சிக்கி உயிரிழந்தார். ஆனால் டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றார். 10 கி.மீ. தூரம் சென்றபோது ஒரு திருப்பத்தில் காரை திருப்பியபோது பிணம் கீழே விழுந்தது. இதனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

அதற்குள் போலீசார் விரட்டிச்சென்று டிரைவரை கைது செய்தனர். கார் மோதி சைக்கிளில் சென்றவர் பலியான நிலையில் அவரது பிணத்துடன் 10 கி.மீ. தூரம் கார் பயணம் செய்த காணொலி காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.


Related Tags :
Next Story