இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை சற்று உயர்வு
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு நேற்றைய எண்ணிக்கையை காட்டிலும் சற்று உயர்ந்து உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை நாள்தோறும் பெருமளவில் குறைந்து வருகிறது. இந்நிலையில், நேற்றுடன் ஒப்பிடும்பொழுது இன்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது.
இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 24 மணிநேரத்தில் 13,193 பேருக்கு (நேற்று 12,881) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.
இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 9 லட்சத்து 63 ஆயிரத்து 394 ஆக உயர்வடைந்து உள்ளது. 10,896 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 6 லட்சத்து 67 ஆயிரத்து 741 ஆக உயர்வடைந்து உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 97 பேர் கொரோனா பாதிப்புகளுக்கு உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 111 ஆக உயர்வடைந்து உள்ளது. நாடு முழுவதும் 1 லட்சத்து 39 ஆயிரத்து 542 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1 கோடியே 1 லட்சத்து 88 ஆயிரத்து 7 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன என தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story