ஸ்ரீநகரின் பார்சுல்லாவில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு : பாதுகாப்புப் படையினர் 2 பேர் உயிரிழப்பு - வீடியோ


ஸ்ரீநகரின் பார்சுல்லாவில்  பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு : பாதுகாப்புப் படையினர் 2 பேர் உயிரிழப்பு - வீடியோ
x
தினத்தந்தி 19 Feb 2021 9:39 AM GMT (Updated: 19 Feb 2021 9:39 AM GMT)

ஸ்ரீநகரின் பார்சுல்லாவில் பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் திடீர் என துப்பாக்கிச் சூடு நடத்திதில் 2 பேர் உயிரிழந்தனர்.

ஸ்ரீநகர்

ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகர் மாவட்டத்தின் பாகத் பர்சுல்லாவில் அடையாளம் தெரியாத நபர்கள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு போலீசார் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் (எல்.ஈ.டி) ஒரு முன்னணி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (டி.ஆர்.எஃப்) இந்த் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

காஷ்மீர் மண்டல  போலீஸ் கூறும் போது 

ஸ்ரீநகர் மாவட்டம் பார்சுல்லா பகுதியில் சில போலீசாரை  பயங்கரவாதிகள் தாக்கினர். தற்போது பாதுகாப்பு படையால் முழுப் பகுதியும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது என கூறி உள்ளது.

கடந்த ஆண்டு புர்ரா, குல்காம், மற்றும் மூன்று பாஜக தொண்டர்களை கொலை செய்த  தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்   உடன் இணைந்த பயங்கரவாதியான ஜாகூர் அஹ்மத் ராதர் என்கிற காலித் என்பவரை ஜம்மு-காஷ்மீர் போலீசார் கைது செய்ததை தொடர்ந்து   இந்த பயங்கரவாத சம்பவம் நடந்துள்ளது.

கடந்த ஆண்டு  மட்டும் 11 அரசியல் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கொல்லப்பட்டனர்.   இதில் தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் என்ற இந்த பயங்கரவாத அமைப்பு ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகொலை செய்யப்பட்ட 11 பேரில் 9 பேர் பாஜகவுடன் தொடர்புடையவர்கள்.



Next Story