கேரளாவில் மேலும் 4,505- பேருக்கு கொரோனா தொற்று


கேரளாவில் மேலும் 4,505- பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 19 Feb 2021 1:50 PM GMT (Updated: 19 Feb 2021 1:50 PM GMT)

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,505- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த  24 மணி நேரத்தில் 4,505- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஒரே நாளில் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,854- ஆக உள்ளது. 

 தொற்று பாதிப்புடன் 59 ஆயிரத்து 814- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 61 ஆயிரத்து 789- ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பால் இன்று அம்மாநிலத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,061- ஆக உள்ளது. கேரளாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 25 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 


Next Story