பாஜக எம்.பி, பிரக்யா சிங் தாகூர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
போபால்,
பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரக்யா சிங் தாக்குரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பிரக்யா சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 50-வயதான பிரக்யா சிங் தாகூருக்கு இரத்த அழுத்தம், ஆஸ்த்மா உள்ளிட்ட போன்ற இணை நோய்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story