கொரோனாவுக்கு பின் நாட்டின் அடுத்த வளர்ச்சி கதையை எழுத போகிறோம்; மத்திய மந்திரி பேச்சு


கொரோனாவுக்கு பின் நாட்டின் அடுத்த வளர்ச்சி கதையை எழுத போகிறோம்; மத்திய மந்திரி பேச்சு
x
தினத்தந்தி 21 Feb 2021 1:21 PM GMT (Updated: 21 Feb 2021 1:21 PM GMT)

கொரோனா பெருந்தொற்றுக்கு பின், இந்தியாவின் அடுத்த வளர்ச்சி கதையை நாம் எழுத போகிறோம் என மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.

சேலம்,

தமிழக பா.ஜனதா கட்சியின் இளைஞர் அணி மாநில மாநாடு சேலம் அருகே உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் நடைபெறுகிறது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மாநில தலைவர் எல்.முருகன், தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ், தேசிய பொதுச்செயலாளர் ரவி, இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா உள்பட பலர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

இந்நிலையில் இளைஞர் அணி மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லி விமானநிலையத்தில் இருந்து தமிழகம் புறப்பட்டார். டெல்லியில் இருந்து இன்று மதியம் 2 மணிக்கு தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்துக்கு வருகிறார். பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் மாநாடு நடைபெறும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டிக்கு வருகிறார். 

மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் வருகையை முன்னிட்டு மாநாடு நடைபெறும் இடத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், தமிழக பா.ஜ.க. இளைஞர் அணி மாநில மாநாட்டில் பேசிய மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், தமிழில் அதிகம் பேச விரும்பினேன்.  ஆனால், அழகிய மொழியான தமிழில் பேச முடியாததற்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

கொரோனா பெருந்தொற்றுக்கு பின், இந்தியாவின் அடுத்த வளர்ச்சி கதையை நாம் எழுத இருக்கிறோம்.  நமது நாட்டில் நாள்தோறும் அந்நிய முதலீடு அதிகரித்து வருகிறது.  அதனால், பங்கு சந்தை உயர்வதுடன் மட்டுமின்றி ஜல்லிக்கட்டு விளையாடுகிறது என பேசியுள்ளார்.

Next Story