நாடு முழுவதும் ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுகள்: இன்று தொடக்கம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 23 Feb 2021 12:02 AM GMT (Updated: 23 Feb 2021 12:02 AM GMT)

நாடு முழுவதும் 2021-ம் ஆண்டுக்கான ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது.

புதுடெல்லி,

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இவை ஜேஇஇ மெயின், ஜேஇஇ அட்வான்ஸ்டு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.

இந்த ஆண்டு ஜேஇஇ மெயின் 2021 தேர்வு ஆண்டுக்கு 4 முறை ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக பிப்ரவரி மாதம் 23ம் தேதி (இன்று) முதல் 26ஆம் தேதி வரை தேர்வு நடைபெறம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜேஇஇ மெயின் 2021 தேர்வு நடைபெற உள்ளது.

இதன்படி கட்டிடவியலுக்கான இளங்கலைப் படிப்பும் வடிவமைப்புக்கான இளங்கலைப் படிப்புக்கான தேர்வும் இன்று தொடங்கி இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்காகத் தேர்வுகளை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்த தேர்வுக்காக ஹால்டிக்கெட்டும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கொரோனா பாதிப்புகள் குறித்த சுய உறுதிமொழிக் குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளது.

Next Story