மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு


மராட்டியத்தில்  கொரோனா பாதிப்பு  தொடர்ந்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 23 Feb 2021 1:43 PM GMT (Updated: 23 Feb 2021 1:43 PM GMT)

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு இன்று மீண்டும் 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக அது 6 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. அதன்படி நேற்று முன்தினம் 6 ஆயிரத்து 971 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் சற்று ஆறுதல் தரும் செய்தியாக 3 நாட்களுக்கு பிறகு நேற்று கொரோனா பாதிப்பு மீண்டும் 6 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதாவது புதிதாக 5 ஆயிரத்து 210 பேர் பாதிப்புக்கு ஆளானார்கள். இந்த நிலையில், மராட்டியத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. அம்மாநிலத்தில் இன்று  6,218- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால்  51- பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 5,869- ஆக உள்ளது. 

மராட்டியத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 21 லட்சத்து 12 ஆயிரத்து 312- ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்து 05 ஆயிரத்து 851- ஆக இருக்கிறது. தொற்று பாதிப்புடன்  53,409- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


Next Story